இத்தாலியின் பல பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மாபியா கும்பலைச் சேர்ந்த 337 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது வரலாறு காணாதா வகையில் அதிகமான மாபியா கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது இதுவே முதற் தடவையாகும்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொலை மிராட்ல், மாபியா சதி மற்றும் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பொது நிர்வாக அதிகாரிகள், நீதிமன்ற எழுத்தாளர்கள் போன்றோரும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பல்கொரியா போன்ற நாடுகளிலும் இதுபோன்ற சில கைதுகள் இடம்பெற்றுள்ளன.