சேலத்தை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த பொறியியலாளர் பார்த்திபன் (28) துபாயில் உள்ள ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் இத்தாலி பேனோ நகரைச்சேர்ந்த எலிஸா செஷா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று அம்மாப்பேட்டையில் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
இதுகுறித்து மணமகன் பார்த்திபன் கூறுகையில், நான் துபாயில் உள்ள ஒரு தனியார் ஆயில் நிறுவனத்தில் பொறியியலாளராக வேலை பார்த்து வருகிறேன்.
நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இத்தாலிக்கு சென்றபோது அங்கு எலிஸா செஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து நாங்கள் 2 வருடங்களாக காதலித்தோம்.
எங்களது காதல் விவாகரம் குறித்து இரு வீட்டாரிடம் தெரிவித்தபோது அவர்கள் சம்மதம் தெரிவித்து இருவீட்டாரும் கலந்து பேசினர்.
இதையடுத்து தமிழ் கலாசார முறைப்படி இன்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
நேற்று மாலை தமிழ் சடங்குங்கள் நடைபெற்ற நிலையில், இன்று காலை இந்து முறைப்படி தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டோம்.
இதில் எங்கள் இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என கூறியுள்ளார்.
மனைவிக்கு விலை அறிவித்த கணவன்: பேஸ்புக்கில் நூதன பதிவு
07-03-2016
பேஸ்புக்கில் தனது மனைவியை விற்க முன்வந்த கணவர் மீது மனைவி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த திலிப் என்பவர் வாங்கிய கடனை திருப்பி அளிக்க எடுத்த நூதன முடிவு பொலிஸ் வழக்கில் முடிந்துள்ளது.
திலிப் வாங்கிய கடனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் மனைவி மற்றும் 2 வயது மகள் புகைப்படத்தையும் இணைத்து பதிவு செய்த திலிப்,
கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி அளிக்க இருப்பதால், தமது மனைவியை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஆர்வம் உள்ள நபர்கள் தமது கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தனது உறவினர் மூலம் அறிந்த அந்தப் பெண், தனது கணவர் திலிப் மாலி மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடனை திருப்பி அளிக்க மனைவியை விற்க கணவன் முன்வந்த சம்பவம் இந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.