14,000 கோடி ரூபாய் மதிப்பில் முகேஷ் அம்பானி வீடு கட்டி வாழும் இதே இந்தியாவின் மற்றொரு பகுதியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறார் பாகியா பிர்ஜெய்ன்.
முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர். மும்பையில் இருக்கிறது முகேஷ் அம்பானியின் வீடு. ‘அன்டிலியா’ என்று அழைக்கப்படும் அந்த வீடு, 27 தளங்களைக் கொண்டது.
சர்வ வசதிகளையும் கொண்ட அந்த வீட்டில், ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்களையும் 168 கார்களையும் நிறுத்திக்கொள்ள முடியும்.
இப்படியான நவீன அரண்மனையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரான 6 பேர் மட்டும் வசித்து வருகின்றனர். 14,000 கோடி ரூபாய் மதிப்பில் முகேஷ் அம்பானி வீடு கட்டி வாழும் இதே இந்தியாவின் மற்றொரு பகுதியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறார், பாக்கியா பிர்ஜெய்ன்.
பாக்கியாவின் 80 வயது தாய் புத்தினி பிர்ஜெய்ன் கடந்த மாதம் பட்டினியால் இறந்துபோனார். 3 நாள்கள் எதையும் உண்ணாமல் இறந்த புத்தினியிடம் ரேஷன் அட்டை கிடையாது; ஆதார் அடையாள அட்டையும் கிடையாது.
புத்தினி, ‘பிர்ஜெயா’ என்று அழைக்கப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ‘பிர்ஜெயா’ பழங்குடியினர், ‘பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய குறிப்பிடத்தக்கப் பழங்குடியினர்’ என்ற அட்டவணையின்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
‘6 முறை விண்ணப்பித்தும் எங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை’ என்று கூறுகிறார், பாக்கியா பிர்ஜெய்ன். கடந்த 2 ஆண்டுகளில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 பேர் பட்டினியால் இறந்துள்ளனர்.
உலகம் முழுவதும் நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மையைப் பற்றி ஒவ்வோர் ஆண்டும் அறிக்கை வெளியிடுகிறது, சர்வதேச நிறுவனமான ‘ஆக்ஸ்பாம்’. இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் எண்கள் மிரளவைக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரப் படிநிலையின் உச்சத்தில் இருக்கும், 1 சதவிகிதச் செல்வந்தர்கள் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சேர்த்த சொத்தின் மதிப்பு 21 லட்சம் கோடி ரூபாய்.
இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியத் தேசத்துக்கும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் தொகை 27 லட்சம் கோடி ரூபாய். இந்தியப் பணக்காரர்களின் வளர்ச்சி, போட்டியில் விரைவில் இந்திய பட்ஜெட்டைத் தாண்டிவிடக்கூடும்.
சொத்துப் பட்டியல்