இஸ்லாமாபாத்: இணையதளத்தை கலைக்க வந்த பாகிஸ்தான் மாடல் அழகி காண்டீல் பலோச் சொந்த சகோதரரால் ஆணவக் படுகொலை செய்யப்பட்டிருப்பது அங்குள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இணைய மற்றுமின்றி பல விளம்பர படங்களிலும் மாடலாக தோன்றியுள்ள காண்டீல் பலோச் சர்சைக்குரிய வகையில் ஆபாச காட்சிகளை நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் முப்தி அப்துல் கவி என்ற மதகுருவுடன் அவர் எடுத்த சில செல்பி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்த மாதிரி தோன்றுவதற்கு பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காண்டலின் காட்சிகளால் குடும்பத்தின் மானம் தொலைந்துவிட்டதாக கூறி அவரது சொந்த சகோதரர் ஆணவக் கொலை நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுதந்திரமான கருத்துக்களை கொண்டிருந்த இளம்பெண் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டதாக மகளிர் உரிமை போராளிகள் கருத்து தெரிவித்துள்ளன.
காண்டீல் கொலை செய்யப்பட்டிருப்பது இஸ்லாமியத்தின் பார்வையில் மிகப்பெரிய குற்றம் என பிரபல மத பண்டிதர் காலித் ரஷீத் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதற்கும் இது எடுத்துக்காட்டு என அவர் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் ஆடைகலை கலைத்து நிர்வாணமாகத் தோன்றுவேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் அப்ரிடிக்கு செய்தி அனுப்பி அதிரசெய்தவர் காண்டீல் பலோச்.
திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்தான இவர். ஒரே மகளுடன் தனியாக வசித்து வந்தார். பாகிஸ்தானில் இதுபோன்று நடக்கும் ஆணவக் கொலை பற்றி விசாரணை நடத்தப்படுவதில்லை என்பது வரலாறு.