இந்த ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித-யானை மோதல்கள், இயற்கை காரணங்கள் மற்றும் ரயில்களில் மோதுண்டு ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த ஆண்டின் கடந்த 11 மாதங்கள் வரையான காலப் பகுதியில் சுமார் 350 யானைகள் உயிரிழந்துள்ளது.
இதேவேளை யானை தாக்குதலினால் மனிதர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதன்படி யானை தாக்குதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 103 ஆகவும் உயர்ந்துள்ளது.