கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் மீது கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து ஹயஸ் ரக வாகனம் வெளிநாட்டில் இருந்து 8 பேரை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இயக்கச்சி ஏ 9 வீதியில் மின்கம்பங்களுடன் மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த 8 பேரும் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.