குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து மாத்தறைக்கு பயணித்துக்கொண்டிருந்த ரெஜின ரயில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்விபத்து காரணமாக குருநாகல் – பொல்கஹவெல இடையிலான ரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பொத்துஹர ரயில் விபத்தால்10 கோடி ரூபா நஷ்டம்
30-04-2014
குருணாகல்- பொத்துஹர ரயில் நிலையத்தில்இன்று காலை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியமைக்கு காரணம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி சமிக்ஞையை கவனிக்காமையே என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
இதே வேளை இந்த விபத்தே இலங்கையில் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய ரயில் விபத்து எனவும் இந்த விபத்தினால் 10 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத அதிகாரி பி.எல்.பி. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்றினை நியமிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பூர் தமிழ் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!
30-04-2014
திருகோணமலை, சம்பூர் பாடசாலை மாணவிகள் மூவர் காணாமற்போன சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பூர், நோவூர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் நேற்று (29) பாடசாலை சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என பொலிஸில் மாணவிகளின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பூரைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிந்தா (16), தங்கராசா சங்கீதா (13) மற்றும் அழகராசா சரிதா (12) என்ற மூவரே காணாமற்போயுள்ளனர்.
இவர்கள் கடத்தப்பட்டுள்ளார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சினை காரணமாக காணாமற்போயுள்ளனரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்று காணாமற்போனநிலையில் மீண்டும் வீடு திரும்பிலய 24 வயதுளைய பெண்ணிடம் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.