இலங்கையின் புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (19-11-2016) தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பு பேரவையின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உபகுழுக்களின் 6 அறிக்கைகள் அரசியல் யாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் சம்பந்தமான உப குழு, நீதித்துறை சம்பந்தமான மீது உபகுழு, நிதி சம்பந்தமான உபகுழு, பொது பாதுகாப்பு பொலிஸ் மற்றும் சட்ட அமலாக்க உபகுழு, பொது சேவை மறுசீரமைப்பு உபகுழு மத்திய அரசு மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தொடர்பு சம்பந்தமான உப குழு ஆகிய 06 உப குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆறு உப குழுக்களுக்கும் ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
புதிய அரசியலமைப்பினை வரையும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு பேரவையின் கீழுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் 9, 10, 11ஆம் திகதிகளில் நடைபெறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும் >> 06-centerpheriperyr-ste-21 << சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிக்கையை பார்வையிடலாம்.