இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 755 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மே 5 ஆம் திகதி காலை 09. 00 மணி வரையான நிலவரப்படி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று மாத்திரம் 33 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 553 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் 137 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இதுவரை 194 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.