இலங்கையில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு செய்தி ஊடகப்பிரிவு ஒன்றுக்கு இலங்கை புற்று நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சங்கத் தலைவர் டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் மட்டும் புற்று நோய் தொடர்பிலான 12000 பேர் பதிவாகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக பெண்கள் ஆவர். மஹரமகவில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளிலும் மார்பகப் புற்று நோய் ஏற்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.
பெண்களின் மார்பகங்களில் ஏதேனும் ஓர் மாற்றத்தை அவதானித்தால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என டொக்டர் தமயந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.