இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணத்தை காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு வாய்த்துள்ளது.
பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டியது.
நேற்று நள்ளிரவு 12.13 க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகியதுடன், இன்று அதிகாலை 5.47 வரை இடம்பெற்றது.
இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவு குறிப்பிட்டுள்ளது.