தெஹிவளை கடற்கரைப் பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் சந்தேக நபர் எனக் கருதப்படும் ஒருவாின் புகைப்படத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ளது.
இவர் தொடர்பில் தகவல் அறிந்தோர் உடனடியாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அல்லது தெஹிவளை பொலிஸ் விசேட பிாிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த நுவன் தரங்க (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்து தகவல் அறிந்தோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை – 011 2779196 பொறுப்பதிகாரி – விசேட பொலிஸ் புலனாய்வுப் பிாிவு – 071 3549488 – 077 6134977