பாக்தாத்: ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும் சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல் தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஓட்டுமொத்தமாக சுட்டுக் கொன்ற சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஷியா பிரிவு தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியது. தற்போது சதாம் உசேனின் ஆதரவாளர்களான சன்னி பிரிவினரின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட த லெவன்ட்) என்ற படையை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். மொசுல், திக்ரித் உட்பட பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி பிரிவினர் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறினர்.
அதைப் கைப்பற்ற விடாமல் தடுக்க ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசூலுக்கு மேற்கே உள்ள தல்அஃபார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான பீரங்கி தாக்குதல் நடைபெறுகிறது.
ராணுவத்தினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியபடி சன்னி பிரிவினர் இங்கு முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாக்தாத் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியை ராணுவம் தடுத்தி நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராணுவத்தினர் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் பிரச்னையில் மீண்டும் தலையிட்டு, மீண்டும் ராணுவத்தை களம் இறக்க அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்பவில்லை. இருந்தாலும் விமான தாக்குதல் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வளைகுடா பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
Militants from the Islamic State of Iraq and Syria boasted on Twitter that they had executed 1,700 Iraqi government soldiers, posting gruesome photos to support their claim.
The authenticity of the photographs and the insurgents’ claim could not be verified, and Iraqi government officials initially cast doubt on whether such a mass execution took place. There were also no reports of large numbers of funerals in the Salahuddin Province area, where the executions were said to have been conducted.
If the claim is true, it would be the worst mass atrocity in either Syria or Iraq in recent years, surpassing even the chemical weapons attacks in the Syrian suburbs of Damascus last year, which killed 1,400 people and were attributed to the Syrian government.