உக்ரைன் நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் காரை ஓட்டி 6 பேர் உயிர் பலியானத்திற்கு காரணமான இளம்பெண் கைது.
உக்ரைன் நாட்டில் அல்யோனா சாய்ட்ஸேவா என்னும் 20 வயது இளம்பெண் தாறுமாறாக காரை ஓட்டியுள்ளார். இந்த கார் சாலையோரத்தில் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இதில் 5 பேர் உயிரிழந்தனர். கார்கிவ் நகரில் நிக்காமல் வேகமாக சென்ற அந்த கார் மற்றொரு காரின்மீது மோதியது. அப்போதும் நிற்காத அந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஒருவர் கர்ப்பிணி பெண்.
அல்யோனா சாய்ட்ஸேவா பிரபல கோடீஸ்வரரான வாசிலி சாய்ட்ஸேவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் இவருக்கு ஏதும் காயம் ஏற்படவில்லை.