இலங்கையில் மலையக மக்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காட்டேரி அம்மன் திருவிழா 25ம் திகதி லிந்துலை – சென்றெகூலஸ் தோட்டத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
காலை 11.30 மணிக்கு தொடங்கிய திருவிழா பிற்பகல் 3 மணியளவில் அன்னதானத்துடன் நிறைவு பெற்றது. காட்டேரி அம்மன் திருவிழா என்பது இலங்கையில் சென்றெகூலஸ் தோட்டத்தில் மாத்திரமே கொண்டாடப்பட்டு வருகிறது.
அது தவிர இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தின் நல்லிப்பாலயம் என்ற ஊரில் மாத்திரமே கொண்டாடப்படுவதாக அறியக்கிடைக்கிறது.
கறுப்பு நிறத்தில் இருக்கும் காட்டேரி என்ற கதாபாத்திம் ஊரில் பில்லி சூனியங்களை அழிக்கும் என்பது ஐதீகம். இதன்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை முன்வைப்பதுடன் ஏற்கனவே நேர்த்திக்கடன் முன்வைத்து நிறைவேறியவர்கள் காட்டேரி அம்மனுக்கு பால், பழம், முட்டை கொடுத்து அபிசேகம் செய்து நன்றி தெரிவிப்பர்.
இம்முறை காட்டேரி நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தமை விசேட அம்சமாகும்.