உயிரிழந்து கரையொதுங்கிய திமிங்கிலம் ஒன்றின் வயிற்றிலிருந்து பெருமளவான பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள செபாலு எனும் சுற்றுலாத்தலத்தில் மேற்படி சிறிய திமிங்கிலம் கரையொதுங்கியது. சுமார் 7 வருட வயதானதாக இத்திமிங்கிலம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்திமிங்கிலத்தை வயிறு, பிளாஸ்டிக் பைகளால் நிறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திமிங்கிலத்தை அப்புறப்படுத்துவதற்காகவும் விசாரணை நடத்துவதற்காகவும் கிறீன் பீஸ் எனும் சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அழைக்கப்பட்டனர்.
பிளாஸ்டிக் பைகள் காரணமாக இத்திமிங்கிலம் இறந்தது என இன்னும் தெரியவில்லை.
ஆனால், எதுவும் நடைபெறாதைப் போல் எம்மால் நடிக்க முடியாது இது குறித்து விசாரிக்கப்படுகிறது என கிறீன் பீஸ் அமைப்பின் உறுப்பினர் ஜோர்ஜியா மொன்ரி தெரிவித்துள்ளார்.