2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதல் இடத்ததைப் பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்ற அவர் 2.8677 Z புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 17ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரனின் இரண்டாவது புதல்வி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதவேளை, கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் இப்ராஹிம் அன்பஸ் அஹமட் உயிரியல் பிரிவில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பதிவு செய்துள்ளார்.
கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்திற்கு அமைய குறித்த மாணவன் தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) மாலை வௌியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.