இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம், திருமணம், திருமணம் வரவேற்ப்பு படங்களுடன், சினிமாட்டிக் ரேஞ்சில் கேண்டிட் போட்டோஷூட், சினிமாட்டிக் வீடியோ ஷூட் எடுப்பதில் புதுமண தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் அதை பெரிய நினைவு பெட்டகமாக உருவாக்கிக் கொள்ளவே இந்த போட்டோஷூட்கள் எடுக்கப்படுகின்றன.
இதற்காக அதிக செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியூர், வெளிநாடு செல்வது, கடலுக்கு அடியே, வானத்தில் என வித்தியாசமாக போட்டோஷூட்கள் எடுத்துக் கொள்பவர்களையும் நாம் காண முடியும்.
ஆனால், ஹருஹிகோ காவாகுச்சி எனும் ஜப்பானிய புகைப்பட கலைஞர் திருமணத்திற்கு முன்னர் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொள்ளும் ப்ரீனப் போட்டோ-ஷூட்டில் வித்தியாசம் காட்டுகிறேன் என விபரீத செயலில் ஈடுபட்டு வருகிறார்…
ஹருஹிகோ காவாகுச்சி ஜப்பானின் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர். இவர், கருவறையில் சிசு எந்த நிலையில் இருக்குமோ, அந்த நிலையில் திருமணம் செய்துக் கொள்ள போகும் ஜோடியை படம் எடுக்கிறார்.
ஆனால், கருவறை சிசுவின் நிலையில் தம்பதிகள் ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு மூடப்படுகிரார்கள். அவர்களை மூடிய பிறகு, அந்த பையில் இருந்து மொத்த காற்றும் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் மூச்சு விட மிகவும் சிரமப்படுவார்கள். காற்று முற்றிலுமாக அகற்றப்பட்டவுடன் ஒருசில நொடிகளில் இவர் படத்தை எடுத்துவிடுவார்.
இந்த போட்டோஷூட்டில் ஒருவரை ஒருவர் இறுக்கமாக கட்டியணைத்தபடி புதுமண ஜோடி இருப்பார்கள். காற்று முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு, அவர்கள் மத்தியில் ஏற்படும் இறுக்கம், மரணத்தின் அருகாமையில் அவர்கள் சென்று வரும் தருணம், வாழ்நாள் முழுக்க அவர்களுக்குள் இணைப்பிரியா அன்புடன் இருக்க உதவும் என இந்த விபரீத போட்டோஷூட்டிற்கு பின்னே அமைந்திருக்கும் கருத்தை கூறுகிறார் ஹருஹிகோ காவாகுச்சி.
சில தம்பதிகள் விசித்திரமான உடைகள் அணிந்து வந்து இந்த போட்டோஷூட் எடுத்துக் கொள்கிறார்கள். சில தம்பதிகள் நிர்வாண நிலையில் இந்த போட்டோஷூட் படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.இந்த போட்டோஷூட் தங்களுக்குள் திருமணத்திற்கு முன்பே பெரிய இறுக்கம் உண்டாக, எங்கள் உறவை முற்றிலும் உணர உதவுகிறது என படம் எடுத்துக் கொள்ளும் ஜோடிகள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானின் டோக்கியோவில் இப்போது ஹருஹிகோ காவாகுச்சியின் இந்த மூச்சை சிறைப்பிடிக்கும் போட்டோஷூட் மிகவும் பிரபலம். பல புதுமண தம்பதிகள், ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டவர்கள், காதலர்கள் இந்த போட்டோஷூட் எடுத்துக் கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆண், பெண் இருவரும் பிளாஸ்டிக் பையில் முழுமையாக சென்றவுடன், காற்று வெளியேற்றப்படுகிறது. முற்றிலுமாக காற்று வெளியேற்றப்பட்டவுடன் பத்து வினாடிக்குள் இந்த படத்தை எடுத்து விடுகிறார் ஹருஹிகோ காவாகுச்சி.இல்லேயேல் அவர்கள் அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஏதேனும் அபாயம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என ஹருஹிகோ காவாகுச்சி கூறுகிறார். மேலும், போட்டோ எடுக்கும் முன்னரே அந்த ஜோடியின் மூச்சி திறன் பாட்டையும் பரிசோதனை செய்துக் கொள்கிறார்கள்.
வீடியோ! மூச்சை சிறைப்பிடிக்கும் இந்த போட்டோஷூட்டை ஹருஹிகோ காவாகுச்சி எப்படி எடுக்கிறார் என பாருங்கள்!