உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 இலட்சம் ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320,130 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,907,371 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,50,294 ஆக உயர்ந்துள்ளதோடு, 91,981 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அதேபோல் ரஷ்யாவில் 2,90,678 பேருக்கும், ஸ்பெயினில் 2,78,188 பேருக்கும், பிரிட்டனில் 2,46,406 பேருக்கும், பிரேசிலில் 2,55,368 பேருக்கும், இத்தாலியில் 2,25,886 பேருக்கும், பிரான்சில் 1,79,927 பேருக்கும், ஜேர்மனியில் 1,77,289 பேருக்கும், துருக்கியில் 1,50,593 பேருக்கும், ஈரானில் 1,22,492 பேருக்கும், சீனாவில் 82,960 பேருக்கும கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ரஷ்யாவில் 2,722 பேரும், ஸ்பெயினில் 27,709 பேரும், பிரிட்டனில் 34,796 பேரும், பிரேசிலில் 16,853 பேரும், இத்தாலியில் 32,007 பேரும், பிரான்சில் 28,239 பேரும், ஜேர்மனியில் 8,123 பேரும், துருக்கியில் 4,171 பேரும், ஈரானில் 7,057 பேரும், சீனாவில் 4,634 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், 992 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன்,அதில் 559 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள். அத்துடன், 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.