சென்னையில் ஆசிரியையொருவர் காதல் தகராறில் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 47). ஆசிரியரான இவர், கணவரைப் பிரிந்து தனது மகளோடு வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கும், 6 மாத குழந்தைக்கு தந்தையான இளையராஜாவுக்கும் (வயது 29) காதல் ஏற்பட்டது.
இதனிடையே, நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் கணபதி (வயது 33) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் நட்பு காதலாக மலர்ந்த நிலையில், நாளடைவில் இளையராஜாவை நிவேதா புறக்கணித்ததாக தெரிகிறது.
இதனால், கோபமடைந்த இளையராஜா, ‘பேஸ்புக்’ காதலரை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனாலும், நிவேதா தொடர்ந்து கணபதியுடன் பேஸ் புக்கில் நட்பில் இருந்தார்.
இதையடுத்து கணபதியை நேரில் சந்தித்து நிவேதாவுடனான நட்பை கைவிடுமாறு எச்சரிக்க இளையராஜா முடிவு செய்தார். அதன்படி, சென்னையில் மூவரும் சந்தித்துக்கொண்டனர். இதில், நிவேதாவுடனான நட்பை கைவிட கணபதி சம்மதித்தார்.
இந்நிலையில், கணபதி தனக்கு கடன் ஏற்பாடு உள்பட பல்வேறு உதவிகள் செய்துள்ளார். எனவே அவருடன் தனியாக சிறிது நேரம் பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னார். அதற்கு இளையராஜா சம்மதித்தார்.
நிவேதா கணபதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இருவரும் நெருக்கமாக அமர்ந்து செல்வதை பார்த்ததும் இளையராஜாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
தனது காரை வேகமாக ஓட்டி சென்று, நிவேதா-கணபதி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில், நிவேதா கீழே விழுந்து பலியானார். கணபதி லேசான காயமடைந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான இளையராஜாவை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரது காரையும் கைப்பற்றினார்.