தான் திருமணம் முடித்தால் தற்போதைய ஆட்சியாளர்கள் என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தான் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனுமதியுடன் தான் கொள்வனவு செய்த வாகனத்தை தூக்கிச் சென்றவர்கள் நாளை நீ எவ்வாறு திருமணம் முடித்தாய் எனக் கேட்டு என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்லமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லாட்சி கடந்த கால விடயங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு இன்று அனைவரையும் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு இழுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவின் நலம் விசாரிக்க சிறை சென்ற நாமல்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.