1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த படம் ரிலீஸ் ஆகி 49 வருடங்கள் கழித்து தற்போது நவீன முறையில் மாற்றங்கள் செய்து இன்று தமிழகத்தில் சுமார் 100 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்த படத்தை திவ்யா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தினர் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் இயக்குனர் சொக்கலிங்கம் இதற்கு முன் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை நவீன முறையில் ரிலீஸ் செய்து லாபத்தை சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துவதாக இந்த படத்தின் நாயகியும் தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக தலைவர் எம்.ஜி.ஆருடன் நான் சேர்ந்த நடித்த பழைய நினைவுகள் என்னை மகிழ்ச்சிபடுத்துகின்றன. இந்த படம் ரீரிலீஸ் ஆவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மீண்டும் ஒருமுறை இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட புதிய சுவரொட்டிகள் -படங்கள் இணைப்பு