பணம் பாதாளம் வரை பாயும் என் பார்கள். இங்கோ அந்தப் பணம் பிதா வரை பாய்ந்துள்ளது. ஆம், தந்தை மகனை கொலை செய்வதும், மகன் தந்தையை கொலை செய்வதும் இன்று நாளாந்த செய்தியாகிவிட்டது. நீர்கொழும்பு, கிம்புலாபிட்டி பிரதே சத்தில் உள்ள ‘ கோல்டன் ஹெவன்’ தோட்ட உரிமையாளரின் மரணமும் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது.
எதிரிசிங்க ஆராச்சிலாகே நவரட்ன 72 வயதான இரு ஆண்பிள்ளைகளின் தந்தையாவார். மூத்தவர் டிரோன் நவரட்ன. இளையவர் கிஹான் நவரட்ன. மூத்தவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் ரஷ்யப் பெண் ஒருவரை திருமணம் செய்து குடியேறியுள்ளதுடன் இளையவர் தனது மனைவி, பிள்ளையுடன் ‘கோல்டன் ஹெவன்’ தோட்டத்தில் உள்ள குடும்பத்தினருக்குரிய வீட்டிலேயே தனது வாழ் நாளை கடத்தலாயினார்.
சிறு வயதிலி ருந்தே தனது இரு மகன்மாருக்கும் அதீத பாசம் கொடுத்து வளர்த்த தந்தைக்கு எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு தேவையான கல்வியை வழங்க முடியாது போனது எனலாம். ஏனெனில் ‘கோல்டன் ஹெவன் ‘ தோட்ட சொத்தினை விற்பனை செய்து எந்தவித கஷ்டமும் இன்றி மகன் மார் இருவரும் வாழ்ந்துவந்தனர்.
அந்த சொத்தினை பாதுகாப்பது தொடர்பிலோ, அல்லது அதனை விருத்தி செய்வது தொடர்பிலோ அவர்கள் கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. இதனாலோ, என்னவோ திருமணம் முடித்தும் கூட அவர்களால் சொந்தக் காலில் நிற்பது என்பது கூட சிர மமாகிவிட்டது.
இந்த ‘கோல்டன் ஹெவன் ‘ தோட்டத்தின் உரிமையாளராக எதிரிசிங்க ஆராச்சிலாகே நவரட்னவின் பெயர் குறிப்பிடப்படுவதிலும் ஒரு கதை உள்ளது.
ஆம், இலங்கை ஆங்கிலேயர் ஆட் சிக்கு உட்பட்டிருந்தபோது இந்த ‘கோல்டன் ஹெவன்’ தோட்டம் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு நெருக்கமானவரான ஸ்காகர் என்ற வெள்ளைக்காரருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அவரின் பின்னரேயே அந்த தோட்டத்தின் உரிமை நவரட்னவுக்கு வந்துள்ளது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்த ‘கோல்டன் ஹெவன்’ தோட்ட உரிமை நவரட்னவுக்கு வந்ததும் அதிஷ்டத்தினால் என்றால் கூட மிகையாகாது. அப்போது நவரட்ன ஒரு பொலிஸ் கான்ஸ்டபி ளாக இருந்துள்ளார். அப்போது ஒரு நாள் கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற வருடாந்த பெரஹரா நிகழ்வொன்றின் பாதுகாப்பு பணிக்காக நவரட்ன கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தலதா மாளிகையின் பிரதான மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியொன்றிலேயே அப்போது அவருக்கு கடமையினை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரைக்காற்சட்டையுடன் கடமையில் நவரட்ன இருந்த போது வெள்ளைக்காரர் ஒருவர் அக்காலத்துக்குரிய சுகபோக வாகனம் ஒன்றில் நவரட்ன கடமையில் இருந்த பிரதேசத்துக்கு வருகை தந்து அந்த இடத்தில் தனது மோட்டார் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
எனினும் பொதுவாக பெரஹரா நடைபெறும் போது எந்தவொரு வாகனமும் அப்பகுதியில் தரித்து நிற்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் அந்த மோட்டார் வாகனம் அருகே சென்றுள்ள நவரட்ன மோட்டார் வாகனத்தை அவ்வி டத்தில் நிறுத்த முடியாது எனவும் நிறுத்திய வாகனத்தை எடுத்துச் செல்லுமாறும் கூறி யுள்ளார்.
எனினும் அந்த வெள்ளைக்காரர் அதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அந்த வெள்ளைக்காரர் வேறு யாரும் அல்ல, கோல்டன் ஹெவன் தோட்டத்தின் உரிமையாளர் ஸ்காகர் என்பவரே அவர். பிரித்தானிய அரச குடும்பத்துக்கு நெருக்கமானவரான அந்த வெள்ளைக்காரர் சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்த நவரட்னவின் பேச்சை கணக்கிலெடுக்காது தொடர்ந்தும் நடந்து செல்ல, முன்னால் சென்று மறித்து வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறுவதற்குள் நவரட்னவின் கான்ஸ்டபிள் உத்தியோகம் பறிபோனது.
உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது கடமையினை சரிவர மேற்கொள்ளாமை காரணமாக நவரட்னவை கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பணி நீக்கம் செய்தி ருந்தார். ஆம், பெரஹெர நடைபெறும்போது வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டிருந்தபோதும் வாகனம் நிறுத்த அனுமதித்த குற்றச் சாட்டின் கீழேயே நவரட்னவின் தொழில் பறிக்கப்பட்டது.
மீண்டும் ஸ்காகர் வரும்வரை அவரின் வாகனத்தின் அருகில் நவரட்ன காத்தி ருந்தார். அதாவது பறிபோயுள்ள தனது கான்ஸ்டபிள் உத்தியோகத்தை சிபாரிசின் மூலம் பெற்றுத்தரக் கோரவே அவர் காத்தி ருந்துள்ளார்.
நீண்ட நேரத்தின் பின்னர் வாகனம் அருகே வந்த ஸ்காகர், நவரட்ன கூறிய விடயங்களை கேட்டு, தன்னால் அவரின் உத்தியோகம் பறிபோயுள்ளதை உணர்ந்து தனது மோட்டார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தனது சாரதியாக புதிய உத்தியோ கத்தை நவரட்னவுக்கு வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த வெள்ளைக்கார ஸ்காகரின் மனதை நவரட்ன நெகிழ்ச்சிப்படுத்தவே ‘கோல்டன் ஹெவன் ‘ தோட்டத்தின் மேற்பார்வையாளராக நவரட்ன நியமனமானார். இளைஞரான நவரட்ன அந்த தோட்டத்தில் வேலை செய்த ஒரு யுவதியுடன் காதல்வயப்பட தனது முதலாளியான ஸ்காகரின் ஆசீர்வாதத்துடன் அந்த யுவதியை கரம்பிடித்தார்.
நவரட்ன விவாகம் செய்து சிறிது காலத் தியே ஸ்காகர் இறந்துவிட்டார். அது திடீர் என ஏற்பட்ட மரணமாகும். அந்த மரணம் தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைகள் உலாவரும் நிலையில், ஸ்காகரின் மர ணத்தின் பின்னர் ‘கோல்டன் ஹெவன்’ தோட்டத்தின் ஏக உரிமையாளராக நவ ரட்ன மாறினார். ஏனெனில் ஸ்காகரின் பின்னர் அந்த சொத்துக்களுக்கு உரிமை கோர யாரும் இருக்கவில்லை.
இது தான் நவரட்ன கோல்டன் ஹெவன் தோட்டத்தின் உரிமையாளரான கதை.
கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட அந்த சொத்துக்கள் நவரட்னவுக்கு சொந்த மானதையடுத்து அதனை நிர்வகிப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டது. ஏனெனில் அந்த ளவு நிர்வாக திறன் நவரட்னவுக்கு இருக்க வில்லை.
அதன் பின்னரான காலப்பகுதியில் நவ ரட்ன தனது மனைவி, இரு மகன்மாரையும் கோல்டன் ஹெவன் தோட்ட சொத்துக் களை படிப்படியாக விற்றே கவனிக்க லானார்.
இதுவே பிற்காலத்தில் மகன்மாரையும் ஆக்கிரமித்துக்கொண்டது. அவர்களும் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான தனது தகப்பனை சொத்துக்களை விற்பனை செய்ய தொடர்ந்தும் வற்புறுத்தி வந்ததுடன் அதன் நிழலிலேயே வாழவும் பழகிக்கொண்டனர்.
இவ்வாறானதொரு நிலையில் காலம் கடந்துகொண்டிருந்தது. அன்று புதன் கிழமை. இன்னும் தெளிவாக சொல் வதென்றால் கடந்த ஆண்டின் இறுதி மாதத்தின் 18 ஆம் திகதி.
நவரட்னவின் இளைய மகனான கிஹான் தனது மனைவி, 14 வயதுடைய பிள்ளை யுடன் வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச் சக்கர வண்டியில் நீர்கொழும்பு நோக்கி பயணித்துள்ளார். தந்தையின் வீட்டிலேயே திருமணமானது முதல் வாழ்ந்து வந்த கிஹான் தனது தந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டே இந்த பயணத்தினை மேற் கொண்டிருந்தார். தனியார் வகுப்பொன்றுக்கு தனது மகளை அனுமதிக்க செல்வதாகவே கிஹான் அப்போது தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்புக்கு சென்ற கிஹான் மீண்டும் கோல்டன் ஹெவன் தோட்டத்தில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பும் போது கடிகாரமோ இரவு 7 மணியை அண்மித்து ஓடிக்கொண்டிருந்தது.
கிஹான், தனது மனைவி பிள்ளை யுடன் வீடு திரும்பிய அந்த கணம் யாரோ ஒருவர் அந்த தோட்டத்தில் வீழ்ந்துகிடப் பதை முச்சக்கர வண்டி சாரதி அவதானித்துள்ளார். முச்சக்கரவண்டி வெளிச்சத்தில் தெரிந்த அந்த உருவம் தொடர்பில் சாரதி கிஹானிடம் கூறவே உடனடியாக முச் சக்கர வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் வீழ்ந்துகிடந்த அந்த நபரிடம் சென்றுள் ளனர்.
திடீரென, எனது தந்தையே என நவரட் னவின் உடலைக் கண்டதும் கிஹான் சத்த மிட்டு அழலானான். உடனடியாக வைத்தி யசாலைக்கு கொண்டு செல்ல முனைந்த போதும் அப்போது நவரட்னவின் உயிர் பிரிந்திருந்தது. தனது தந்தைக்கு இறுதி நொடிகளில் நீர் சொட்டேனும் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என புலம்பிப் புலம்பி கிஹான் அழலானார்.
அத்துடன் நீர்கொழும்பில் உள்ள தனது அண்ணனான டிரோனின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தந்தையின் மரணம் தொடர்பில் தெரிவிக்கவே டிரோனும் உடனடியாக கோல்டன் ஹெவன் தோட்டத்தில் உள்ள தந்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
உடனடியாக ஸ்தலத்துக்கு சென்ற நீர் கொழும்பு பொலிஸார் ஆரம்பகட்ட விசார ணைகளைத் தொடர்ந்து சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். நவரட்னவின் மரணம் கீழே விழுந்ததால் ஏற் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித் தனர். ஏனெனில் நவரட் னவின் வயதும் அதற்கு காரணமானது. அத்துடன் உடலில் காணப்பட்ட சிராய்வுக் காயம் விழுந் ததால் ஏற்பட்டதோ என பொலிஸார் சந்தேகித் தனர்.
எனினும் பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்த நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியான ஏ.தயாபாலவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. திடீர் என்றோ அல்லது இயற்கையாகவோ நவரட்ன மரணிக்கவில்லை என்பதை சட்ட வைத்திய அதிகாரியான தயாபால கண்டறிந்தார். உடன் செயற்பட்ட அவர் நீர்கொழும்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த லியனகேவுக்கு அவர் விடயத்தை கூறினார்.
ஏனெனில் உடலில் அடிகாயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள், இணைப்பெலும்புகள் முறிவு மற்றும் தொண்டைக் குழி எலும்பு முறிவு போன்றவற்றை வைத்து சட்ட வைத்திய அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான ஜயந்த லியன கேவுக்கு நடந்திருப்பது ஒரு கொலை என் பதை குறிப்பிட்டார்.
இதனையடுத்து உடன் செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த லியனகே,வயோதிபரை கொல்வதற்கு முன்னர் பலமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதையும் அதனை தொடர்ந்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அனுமானித்துக்கொண்டார். எனினும் இதனை யார், எதற் காக செய்தனர் எனற வினாக்களுக்கு விடை தெரியாமலேயே இருந்தது.
இந் நிலையில் தனது மேற்பார்வையின் கீழ் இயங்கும் நீர்கொழும்பு பிரிவு குற் றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுசந்த பிரியதர்ஷ னவை அழைத்து நவரட்னவின் கொலை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிடு மாறு கூறி அது தொடர்பில் வழங்கவேண் டிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இதனை அடுத்து நவரட்னவின் கொலை தொடர்பில் பல குழுக்களை அமைத்த பொலிஸ் பரிசோதகர் சுசந்த பிரியதர்ஷன விசாரணைகளை தொடர்ந்தார்.
அப்போது நவரட்ன தனது இறுதி நாட்களில் கோல்டன் ஹெவன் தோட்டத்தை விற்றுவிட்டு அனுராத புரம் முதியோர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது காலத்தை கழிக்க விரும் பியமையையும் அதற்காக 18 கோடி ரூபா விலை நிர் ணயம் செய்து தொழிலதிபர் ஒருவருடன் பேச்சு நடந்த மையையும் பொலிஸாரால் தெரிந்துகொள்ள முடிந்தது.
அன்று கோல்டன் ஹெவன் தோட்ட உரி மையாளரான வெள்ளைக் காரர் அத்தோட்டத்தை கையளிக்கும் போது அவர் பயன்படுத்திய வாகனம் உள்ளிட்ட புராதன சொத் துக்கள் அந்த தோட்டத்தில் இன்றும் உள்ள நிலையில் தனது மகன்மார் சொத்தினை படிப்படியாக விற்று தீர்ப்பதை தவிர்க்கவே அவர் இவ்வாறு ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளதையும் பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்த முடிந்தது.
எவ்வாறாயினும் தந்தையின் இந்த தீர் மானத்தை இரு மகன்மாரும் எதிர்த்த நிலையில் அவர்களே இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகித்தனர். எனினும் அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அண் ணனும் தம்பியும் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்திருக்க வேண்டும் என்பதே பொலிஸாரின் சந்தேகம்.
இதனைத் தொடர்ந்து சிவில் உடையில் பொலிஸ் குழுவொன்று மரண வீட்டுக்கு சென்று வேவு பார்த்தது.
இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தேரரின் மத கிரிகை நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்க இளைய மகனான கிஹான் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சிக்க சிவில் உடையிலிருந்த பொலிஸ் உள்ளிட்டவர்களின் உதவியுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
கிஹான் தற்கொலைக்கு முயற்சித் ததால் பொலிஸாரின் சந்தேகமும் கவ னமும் கிஹான் பக்கம் திரும்ப உண்மை வெளியில் வந்தது.
தனது தந்தையான நவரட்னவை கொலை செய்ய ஒரு கோடி ரூபா ஒப் பந்தத்தை கிஹானே வழங்கியமை தெரிய வந்தது.
நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல பாதாள உலகத் தலைவனாக அறியப்பட்ட ‘கொடு அனுர ‘என்பவருக்கே கிஹான் இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். 25 ஆயிரம் ரூபா முற்பணத்துடன் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்த கொடு அனுர டிசம்பர் 18 ஆம் திகதி கிஹான் வழங்கிய தகவலின் பிரகாரம் நவரட்ன தனிமையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தனது சகாவுடன் சென்று இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் உறுதியானது.
குறித்த 18 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் கோல்டன் ஹெவன் தோட்டத்துக்கு சென்ற கொடு அனுரவும் அவரது உதவியாளரும் நவரட்னவை பலமாக தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தமை விசாரணைகளில் உறுதியானது.
உடன் செயற்பட்ட நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்களான கிஹான், கொடு அனுர மற்றும் அவரது உதவியாளர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ஒப்பந்தத்தில் பேசப்பட்ட ஒரு கோடி ரூபாவில் 25 ஆயிரம் ரூபாவை ஏற்கனவே பெற்ற அனுர மீதி பணத்தொகையை கிஹானிடம் கோரி பிரச்சினை செய்துவந்த நிலையிலேயே, கிஹான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளமையும் விசாரணைகளில் வெளியான தகவல்களாகும். சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
-எம்.எப்.எம்.பஸீர் –