குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் இளம்தாய் ஒருவர் தீடீரென உயிரிழந்தார். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.
திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் கடந்த மாதம் குறித்த ஆசிரியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இச் சம்பவத்தில் விஜயகுமார் சர்மிலா [வயது 30 ] என்ற இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.