மேற்கு ஆபிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற 25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இவருக்கு 5 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் கிடைத்துள்ளன.
ஏற்கனவே இவரை ஸ்கேன் செய்த போது இவருக்கு ஏழு குழந்தைகள் பிறக்கும் என வைத்தியர்கள் கூறியிருந்தனர்.
எனினும் ஒன்பது குழந்தைகளை அடுத்தடுத்து பிரசவித்துள்ளார் இந்த இளம் தாய்.
அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
மாலி இளம் தாயின் இந்த பிரவசவம் உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படுவதுடன் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களையும் ஈர்த்துள்ளது.