காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முனை ஒல்லிக்குளம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டவை ‘பெங்களுர் டேர்பிடோர்’ எனப்படும் குண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் குழாய்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினர் கிடைத்த தகவலின் அடிப்படையில் இப்பிரசேத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் பாரிய குழாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார்
தெரிவித்தனர்.
மண்முனை ஒல்லிக்குளம் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் முற்றுகையிடப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் இடத்திலிருந்தே இந்த குழாய்கள் கண்டு பிடிக்கப்;பட்டுள்ளன.
4அடி நீளமுடைய 3 குழாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குண்டுகளை வைத்து வெடிக்க வைக்கும் வகையில் இக்குழாய்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 21.04.2019 அன்று கட்டுநாயக்கா விமான நிலையம் செல்லும் வீதியில் மீட்கப்பட்ட குண்டுகள் இது போன்ற குழாய்களிலேயே பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.