நகைச்சுவை நடிகையான வித்யூலேகாவின் கடவுச்சீட்டு மற்றும் முக்கிய ஆவணங்கள் ஒஸ்திரியாவில் திருடப்பட்டதால், ட்விட்டர் மூலம் உதவியை நாடியுள்ளார்.
நீதானே என்பொன்வசந்தம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பிறகு பல ஹிட் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் கலக்கிவருகிறார்.
சமீபத்தில் நண்பர்களுடன் ஒஸ்திரியா சென்றிருந்த போது கடவுச்சீட்டு, மற்றும் முக்கிய ஆவணங்கள் ஹோட்டல் வரவேற்ப்பு பகுதியில் திருடப்பட்டதால் தற்போது சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, ‘எனது கடவுச்சீட்டு, கார்ட், பணம் என அனைத்தும் அடங்கிய பை ஹோட்டல் வரவேற்ப்பு பகுதியில் திருடப்பட்டு விட்டது.
எவ்வளவு சீக்கிரம் முடியோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சி.சி.டி.வி கெமராவில் பதிவான விஷயங்களைக் காண எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஒஸ்திரிய பொலிஸார் பார்த்துள்ளனர்.
ஒரு மனிதர் என்னை திசைதிருப்ப வேண்டி ஒரு முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும் எனக் கேட்டான். நான் எனக்குத் தெரியாது எனக் கூறினேன். அவனது நண்பன் எனக்கு பின்னால் வந்து எனது பையை எடுத்து விட்டான்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தியத் தூதரகம் எனக்கு உதவும் என நம்புகிறேன். ஒஸ்திரிய பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
நான் தூதரகத்திற்கு செல்லவிருக்கிறேன். நண்பர்களுடன் நினைத்து மகிழ வேண்டிய பயணமாக இருந்த இந்த ட்ரிப் தற்போது சோகமான முடிவாக அமைந்துள்ளது. பணம், கடவுச்சீட்டு என அனைத்தும் இழந்துவிட்டது என் விதி என நினைக்கிறேன்’ என்றுள்ளார்.
பிரதமரின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து உதவி கேட்டுள்ளார் வித்யூலேகா. தற்சமயம் குஷ்பூ உள்ளிட்டோர் ட்விட்டரில் வித்யூலேகாவுடன் தொடர்பிலேயே இருக்கிறார்கள். பல நண்பர்கள் அவருக்கு ஆறுதலும் கூறி வருகிறார்கள்.
ஒரு ஹோட்டல் வரவேற்ப்பு பகுதியில் இப்படி திருடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விஷால் நடித்திருக்கும் ‘மருது’ படத்தின் டீசர் வெளியீடு.
முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் மருது படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
குட்டிப்புலி, கொம்பன் , புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது.
சமீபத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது.
இதை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரபல ஐங்கரன் நிறுவனத்துடன் சேலத்தை சேர்ந்த 7ஜி சிவா மற்றும் அசோக் சாம்ராஜ் ஆகியோர் இந்த படத்தை கூட்டாக தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.
டீசர் காணொளி இணைப்பு..