வவுனியா, ஒமந்தை, ஏ9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை எற்றி வந்த பேருந்து பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6.10 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது.
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பேரூந்து ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் பயணித்த போது எதிர் திசையில் முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் குறித்த பேரூந்தில் பயணித்த 24 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.