மும்பை: காதல் முறிந்து விட்டதாகக் கருதப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் சேர்ந்து ரகசியமாக டின்னர் சாப்பிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். விராட் போட்டியில் தோற்றால் அதற்காக அனுஷ்காவை ரசிகர்கள் திட்டும் அளவிற்கு அவர்களது காதல் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
உடைந்தது காதல்… அதனை நிரூபிப்பது போல், இருவரும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்தனர். சல்மான் கானின் சுல்தான் படத்தில் பிசியானார் அனுஷ்கா. மீண்டும் கோஹ்லியுடன் சேரும் பேச்சுக்கே இடமில்லை என அனுஷ்கா கறாராக அவரை புறக்கணிப்பதாக கூறப்பட்டது.
சமாதானத் தூது…
ஆனால், டி20 உலகக்கோப்பையில் அடுத்தடுத்து அதிரடி ஆட்டங்களால் ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்த விராட்டிற்கு அனுஷ்காவின் காதலை விட இயலவில்லை. அனுஷ்காவின் சகோதரர் மூலம் அவர் தொடர்ந்து சமாதானத் தூது அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.
டிவிட்டரில் கோபம்…
அனுஷ்காவை பிரிந்தாலும் அவரை கிண்டல் செய்பவர்களை டிவிட்டரில் விளாசினார் கோஹ்லி. இதுவே அனுஷ்கா மீதான அவரது காதலை உறுதி செய்தது.
ரகசிய சந்திப்பு…
இந்நிலையில், இடையில் என்ன மாயம் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. மீண்டும் விராட் – அனுஷ்கா ஜோடி சமாதானம் ஆகியுள்ளனர். இருவரும் ரகசியமாக இரவு உணவைச் சேர்ந்து சாப்பிட்டு, தங்கள் காதலுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர்.
போட்டோக்கள் லீக்…
ஆனால், பிரபலங்கள் வாழ்க்கையில் ரகசியங்களைப் பொத்தி வைப்பது கடினமான விசயம். எப்படியோ இருவரும் ரகசிய விருந்துக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.
மீண்டும் வசந்தம்…
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசியதாகத் தெரிகிறது. இதன் மூலம் முந்தைய மனக்கசப்புகள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.