கட்டநாயக்க விமான நிலையத்தில் அதி நவீன துப்பாக்கிகள், றொக்கட் லோஞ்சர்கள் என்று பல ராணுவம் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளது. இதனை பார்த்த சுங்க அதிகாரிகள் மிரண்டு போனார்கள்.
மீண்டும் புலிகள் உருவாகி விட்டார்கள் என்று நினைத்து பதறி அடித்து பாதுகாப்பு அமைச்சோடு தொடர்புகொண்டுள்ளார்கள்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சுக்கும் சில தகவல்கள் சரியாக தெரியவில்லை. இதனால் சுங்க அதிகாரிகள் மேலும் குழப்பத்தில் இருந்தவேளை.
இவை அனைத்தும் அமெரிக்க தூதுவராலயம் வரவளைத்த டம்பி ராணுவ உபகரணங்கள் என்று தெரியவந்துள்ளது. பின்னரே பாதுகாப்பு அமைச்சும் இதனை உறுதிசெய்துள்ளது.
இலங்கையில் அமெரிக்க படைகள் சிங்கள ராணுவத்திற்கு பல பயிற்ச்சிகளை கொடுக்க உள்ளது. இதன் ஒரு அங்கமாகவே குறித்த டம்மி ஆயுதங்கள் வரவளைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.