கண்டியில் 14 வயது பள்ளி சிறுமியை பாலியன் வன்கொடுமைக்கு உட்படுத்தினர் எனக் கூறப்படும் ஏழுபேரை கண்டி பூஜாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் கடந்த 6 மாதங்களில் குறித்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் 29 வயதான இளைஞர் ஒருவர் ஆரம்பத்தில் சிறுமிக்கு கையடக்க தொலைபேசியொன்றை பரிசளித்து தொடர்பை மேற்கொண்டுள்ளார் எனவும், அதன்பின்னர் தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தே இவ்வாறு கொடூரச் செயலில் இறங்கியுள்ளனர்.
அத்துடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.