கண்டியிலுள்ள ஒகஸ்டவத்த தடுப்பூசி செலுத்தும் மையத்தில் வயதான பெண்மணி ஒருவருக்கு தற்செயலாக இரண்டு டோஸ் மொடர்னா தடுப்பூசி ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டோஸ் செலுத்தி சிறிது நேரத்தின் பின்னர் இரண்டாவது டோஸை ஏற்றிய போது அவர் மயக்க நிலையை அடைந்துள்ளதுடன், மற்றும் சில சிக்கல்களை உருவாகியதையடுத்து
அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டதாக வைத்தியர்களிடம் அப்பெண் தெரிவித்துள்ளார் என்பதுடன், அவரது கணவர் பேராதனை பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இந்த சம்பவம் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.