ஆந்திர மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மணமகள் திருமணம் வேண்டாம் என கூறியும், மணமகன் தாலி கட்டிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த சோமசேகர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு பெரியவர்கள் சம்மதம் தெரிவித்துவிட, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து திருமண நாள் அன்று, சோமசேகர், ஷில்பாவிற்கு தாலிகட்ட நெருங்கிய போது, ஷில்பா வேண்டாம் வேண்டாம் என்று தடுத்துள்ளார்.
ஆனால், இதனை யாரும் செவிகொடுத்து கேட்காமல், ஷில்பாவை சுற்றியிருந்த உறவினர்கள் பிடித்துக்கொள்ள, மாப்பிள்ளை வலுக்கட்டாயமாக தாலிகட்டியுள்ளார்.
இவர், எதற்காக கடைசி நேரத்தில் இந்த திருமணத்தை மறுத்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.