ஓட்டாவா தேசிய போர் நினைவகத்தில் கடமையில் இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மரணச்சடங்கு அவரது சொந்த இடமான ஹமில்ரனில் இராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஹமில்ரனில் கடந்த செவ்வாய்கிழமை நதன் சிரில்லோ என்ற வீரருக்கு நடந்த இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள், பிரதம மந்திரி உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்த வீரரின் 5வயது மகன் மிகுந்த மனவேதனையுடன் தனது தந்தைக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இவரது இறுதி ஊர்வலம் ராணுவ வாகனத்தின் பின்னால் ஹமில்ரன் வீதி வழியாக வீரர்களின் மெதுவான அணிவகுப்பு நடையுடனும் வாத்தியத்துடனும் சென்றுள்ளது.
– See more at: http://www.thinakkural.lk/article.php?world/dlvvuyzrcs90361e14bfe27123972lw2yv4193e7af5abc64ecbd6b46kknad#sthash.oBIxezeV.dpuf
ஓட்டாவா தேசிய போர் நினைவகத்தில் கடமையில் இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மரணச்சடங்கு அவரது சொந்த இடமான ஹமில்ரனில் இராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஹமில்ரனில் கடந்த செவ்வாய்கிழமை நதன் சிரில்லோ என்ற வீரருக்கு நடந்த இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள், பிரதம மந்திரி உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்த வீரரின் 5வயது மகன் மிகுந்த மனவேதனையுடன் தனது தந்தைக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இவரது இறுதி ஊர்வலம் ராணுவ வாகனத்தின் பின்னால் ஹமில்ரன் வீதி வழியாக வீரர்களின் மெதுவான அணிவகுப்பு நடையுடனும் வாத்தியத்துடனும் சென்றுள்ளது.