60 இலங்கையில் சுற்றுலா பிரதேசங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் சுற்றுலா பயனிகளின் நன்மை கருதி பொலிஸ் மா அதிபர் பூஸித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் சுற்றுலா பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாசிக்குடா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை மாலை சுற்றுலா பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களது வழிகாட்டல் வசதிகளை வழங்கும் நோக்கோடு இவ் ரோத்து கடமையில் ஈடுபடும் பொலிஸார் மேற்கொள்வார்கள் என்று கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.டபள்யூ.எஸ்.நிஷாந்த வெதெஹே தெரிவித்தார்.