பெங்களூரு அருகே திருமண நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு சாப்பாடு இல்லாத காரணத்தால் மணமகனும் அவரின் வீட்டாரும் செய்த வாக்குவாதத்தில் திருமணத்தையே மணமகள் நிறுத்திவிட்டார்.
பெங்களூரு அருகே கொனானாகுண்டா பகுதியில் திருமணத்துக்கான முதல் நாள் நடந்த முன்னேற்பாடு நிகழ்ச்சியில், உறவினர்களுக்கு சாப்பாடு போடாத காரணத்தால் இருவீட்டாருக்கும் நடந்த வாக்குவாதத்தில் மணமகள் திருமணமே வேண்டாமென நிறுத்திவிட்டார்.
நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்வில் சாப்பாடு போதவில்லை என மணமகன் வீட்டார் புகாரளித்து சண்டையிட்டுள்ளனர்.
பின்னர் இருவீட்டாரும் சமாதானமாகி திருமண ஏற்பாட்டில் ஈடுபடத்தொடங்கினர். முதல் நாள் இரவு நடந்த இந்த சச்சரவால் காலையில் திருமண மேடைக்கு வராமல் மணமகள் திருமணத்தைப் புறக்கணித்துவிட்டார்.
இரு குடும்பப் பிரச்னையின்போது நிலைமையைப் புரிந்துகொண்டு தன்னுடன் நிற்காத ஒருவரை தன் கணவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என அப்பெண் தெரிவித்துவிட்டார்.
மணமகளை சமாதானப்படுத்துமாறு மணமகன் வீட்டார் கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்பெண் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருவீட்டாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.