கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி
கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தெங்கவிட்டு, தற்கொலை நாடகமாடிய மனைவி, அவரின் கள்ளக்காதலன் ஆகியோரை கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா தங்கமேஸ்வரா கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் அச்சப்பா (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி துளசா (வயது 28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி அச்சப்பா தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக துளசா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் அச்சப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கல்கட்டகி புறநகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே அச்சப்பாவின் பிரேத பரிசோதனை அறிக்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில் அச்சப்பாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இதனால் அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டமை தெரியவந்ததையடுத்து இதுதொடர்பாக பொலிஸார் விசாரணைனை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பந்தமாக அச்சப்பாவின் மனைவி துளசாவிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது துளசா, தனது கள்ளக்காதலனான எல்லப்பாவுடன் சேர்ந்து அச்சப்பாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்டு விசாரித்தபோது, விசாரணை வாக்குமூலத்தில் கூறியதாவது, எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த எல்லப்பா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
எனது கணவர் அச்சப்பா வேலைக்கு சென்றதும், தினமும் எல்லப்பாவை வீட்டுக்கு வரவழைத்து அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததுடன், கணவனிடம் தனது பெற்றோரைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியூர்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து விட்டு வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு வருவோம்.
இதுகுறித்து எனது கணவர் அச்சப்பாவுக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், என்னை அடித்து காயப்படுத்தி வந்தார்.
இதனால் எனது கள்ளக்காதலனுடனான உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் எனது கணவர் அச்சப்பாவை கொலை செய்ய நானும், எல்லப்பாவும் முடிவு செய்தோம்.
அதன்படி சம்பவத்தன்று, வேலைக்கு சென்று வந்த அச்சப்பாவை ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசம் அனுபவித்தேன்.
இரவு 12 மணியளவில் எனது கள்ளக்காதலனை ஏற்கெனவே எனது வீட்டுக்கு வரும் படி அழைத்திருந்தேன்.
அதன்படி அவர் 12 மணியளவில் எனது வீட்டுக்கு வந்தார். எனது கணவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் நானும், எல்லப்பாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தோம். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து எல்லப்பாவும், நானும் சேர்ந்து அச்சப்பாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டோம்.
இதனையடுத்து, எல்லப்பா அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நான் எனது கணவர் அச்சப்பா தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன்.
ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் நான் பொலிஸில் சிக்கிக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
துளசா கொடுத்த தகவலின்பேரில் அவரின் கள்ளக்காதலன் எல்லப்பாவையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.