தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி தாளவாடி அருகே உள்ள அரலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஜோதி(வயது 35). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஜோதிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(வயது 26) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இருவரும் அடிக்கடி கையடக்கத்தொலைபேசியில் அந்தரங்க விடயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சந்திக்கும் போதெல்லாம் கள்ளக்காதலிக்கு சந்திரசேகர் காதல் கடிதங்களையும், பரிசு பொருட்களையும் கொடுத்துள்ளார். அவ்வப்போது தேவைக்கு பணத்தையும் கொடுத்து வந்துள்ளார்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இருவரையும் அவர்களது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளக்காதலர்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இது குறித்து அறிந்த சந்திரசேகரின் தந்தை அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்தார். அதையறிந்த ஜோதி தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென சந்திரசேகரிடம் பிரச்சினை செய்துள்ளார்.
அப்போது அவரை சமாதானம் செய்த சந்திரசேகர், திருமணம் முடிந்தாலும் உன்னுடன் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு சந்திரசேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னரும் சந்திரசேகர், ஜோதியுடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையிலே, ஜோதியிடம் இருந்து சந்திரசேகர் விலக ஆரம்பித்துள்ளார். இதனால் ஜோதி தன்னுடனான கள்ளக்காதலை கைவிடக்கூடாது என்று பிரச்சினை செய்துள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டு சந்திரசேகரை தொந்தரவு செய்துள்ளார்.
பணம் தரவில்லை என்றால் எனக்கு நீ கொடுத்த காதல் கடிதங்கள், போட்டோக்கள், பரிசு பொருட்கள், தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றை உன் குடும்பத்தாரிடமும், மனைவியிடமும் கொடுத்து விடுவேன் என்று கூறி சந்திரசேகரை ஜோதி மிரட்டியுள்ளார்.
அவரது மிரட்டலுக்கு பயந்து சந்திரசேகர், ஜோதிக்கு பணம் கொடுத்து வந்தார். இவ்வாறாக அவர் இதுவரை 5 இலட்சம் வரையில் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதி மீண்டும் சந்திரசேகரிடம் 50,000 பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்தார்.
ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும், தன்னை தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக வாழ விடுமாறும் சந்திரசேகர், ஜோதியிடம் கூறியுள்ளார். இந்நிலையிலேயே தொடர்ந்தும் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் சம்பவத்தன்று ஜோதியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் வெளியே வருமாறும், அங்கு வைத்து பணம் தருகிறேன் என்றும் கூறினார்.
அதன்பேரில் ஜோதியும் தனது கள்ளக்காதலனான சந்திரசேகருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்த பின்னர், சந்திரசேகரிடம், ஜோதி பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், ஜோதியை தாக்கினார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் பெரிய கல்லை எடுத்து ஜோதியின் முகத்தில் போட்டுள்ளார்.
பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு சந்திரசேகர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார்.
இதற்கிடையே வெளியே சென்ற தன்னுடைய மனைவி ஜோதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குருசாமி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஜோதி, அவருடைய கள்ளக்காதலன் சந்திரசேகருடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதனால் இதுபற்றி குருசாமி தாளவாடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து பொலிஸார் சந்திரகேகரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.