தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரா என்ற பெண்ணே தனது கள்ளக்காதலனான சுலிவனுக்கு தனது 14 வயது ஊனமுற்ற மகள் கிரேஸ் பாக்கரை இரையாக்கி அதை ரசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சுலிவன் கிரேஸ் பாக்கருக்கு அதிக மாத்திரைகள் கொடுத்துள்ளார். இதனையடுத்து கிரேஸ் மயக்கமடைய அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.
அதுமட்டுமன்றி தாய் சாரா பாக்கர், தனது மகளை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகள் உயிருடன் இருப்பதாக கூறி அவரை மீட்க நீதி வசூல் செய்துள்ளார்.
இந்நிலையில், வேட்டைக்காரர்கள் மர்மமான முறையில் கிடந்த உடலை குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளளனர்.
பின்னர், உடலை மீட்டு ஆய்வு செய்ததில் அது கிரேஜ் பாக்கரின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேஸின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த பொலிசாரிடம், சாரா பாக்கர் வீட்டில் வசித்து வந்த கரேன் என்ற பெண், தான் நேரில் கண்ட சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.
பொலிஸார் இக்கொலையை செய்த 44 வயது சுலிவன், 41 வயது சாரா பாக்கர் ஆகியோரை கைது செய்துள்னர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.