மேயாத மான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
வெள்ளித்திரையில் இவரது முதல் படம் ‘மேயாத மான்’ ஆக இருந்தாலும். அதற்கு முன்பாகவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பிரியா.
சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலமாக அனைவரது மனதிலும் இடம் பெற்ற இவர், சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரைக்கும் குட்பாய் சொல்லி விடைபெற்றார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்டுள்ளார்.
இதன்போது பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் காதலிப்பதாகவும், ஆனால், திருமணத்திற்கு இன்னும் தயாராக வில்லை என்றும் கூறியுள்ளார்.