காரைநகர் டிப்போவுக்கு அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவருவர் காயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காரைநகரைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் உள்ள பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.