கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில் விழுத்து உயிரிழந்துள்ளார்.
இரவுவேளை வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்த நிலையில் நேற்று மதியமளவில் இறந்தநிலையில் பிரமந்தனாறு பிரதான கால்வாயில் இனங்காணப்பட்டதையடுத்து தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் 51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.