வவுனியா மகாறம்பைகுளம் புளியடி பகுதியில் கிணற்றுக்குள் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்ற 85 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.