கிளிநொச்சி, பூநகரி- பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.