கிளிநொச்சி ஊற்றுப்புலம் என்னும் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசித்துவரும் வ.பிரேம்குமார் அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள்.
பிரேம்குமார் அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்றே தனது குடும்ப செலவுகளை சமாளித்து வருகின்றார்.
இவரது மகனான பிரேம்குமார் டனுஜன் ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் 6ல் கல்வி கற்றுவந்த வேளையில் 2 மாதங்களுக்கு முன்பு பாடசாலையில் மயக்கமுற்று விழுந்தார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக பொரளை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவருக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு15 00 000 (பதினைந்து லட்சம் ருபாய்) தேவை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பிரேம்குமாரால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாதுள்ளதனால், உறவுகளான உங்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
உயிருக்குப் போராடும் இச் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற அன்புள்ளம் கொண்டவர்கள் உதவிடுங்கள்.
தொலைபேசி இலக்கம் – 0766770518
வங்கி கணக்கிலக்கம்- வ.பிரேம்குமார்
048200100049138
மக்கள் வங்கி
கிளிநொச்சி
தேசிய அடையாள அட்டை-760873861V