கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 31 வயதான இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9 மாத குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் கணவர் மனைவி மற்றும் ஒரு குழந்தை அடங்கலாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணமாகி ஒருவருடம் ஆகியுள்ள நிலையில் இவர்களிற்கு 9 மத குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கணவர் நேற்று வெளி மாவட்டம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அவர் வெளி மாவட்டத்திற்கு சென்ற நிலையில் குறித்த குடும்ப பெண்ணிற்கு துணையாக முதியவர் ஒருவர் அங்கு பாதுகாப்பிற்காக தங்கியுள்ளார்.
அவர் அதிகாலை 5.30 மணியளவில் அவர் சென்றுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. காலை கணவர் வீட்டுக்கு வந்த போது மனைவி சடலமாக இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைகைதந்த அக்கராயன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும், கூரிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் காலை 6.30 மணிக்கு பின்னர் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று விசாரணைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்க்பபட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கை மற்றும் தடயங்களை வைத்து மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரியை விரைவில் கைது செய்ய விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.