கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஊரியானைப் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது 40) என அறிய முடிகிறது
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
தனது இரண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோருடன் குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் மீன்பிடிப்பதற்காக குளத்தில் இறங்கிய அவரை குளத்தில் காணப்பட்ட முதளை இழுத்துச் சென்றதாக அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கிளிநொச்சி பொலிசார் ,இராணுவத்தினரின் மீட்ப்புக் குழு ,வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அக் கிராம இளைஞர்கள் இணைந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் சுமார் இரண்டுமணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பொலிசாரால் கொண்டு செல்லப்படுவதுடன் மேலதிக விசாரணைகளையும் கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்