சுடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து அவற்றை வீட்டிற்கு எடுத்து வந்து அவற்றை சமைத்து சாப்பிடும் கொடூர குணம் கொண்ட இருவரை நேற்று பாகிஸ்தானில் போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடைய பயங்கர செயலால் அந்த பகுதியே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் Darya Khan என்ற பகுதியை சேர்ந்த Mohammad Arif, என்ற 35 வயது நபரும், அவருடைய சகோதரர் Mohammad Farman, என்ற 30 வயது நபரும் கடந்த 2012ஆம் ஆண்டு சுடுகாட்டில் இருந்து குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து உணவாக சமைத்து சாப்பிட்டனர் என்ற குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் விடுதலை ஆனார்கள்.
நேற்று முன் தினம் இவர்களுடைய வீட்டில் இருந்து துர்வாடை வருவதாக பக்கத்து வீட்டினர் கொடுத்த புகாரின் அடிப்படையின் பாகிஸ்தான் போலீஸார் அதிரடியாக Mohammad Farman வீட்டிற்குள் சென்று சோதனை செய்து பார்த்ததில் ஒரு சிறுவனின் தலை மட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
விடுதலை ஆன பின்பும் மீண்டும் இவர்கள் குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து சமையல் செய்து சாப்பிட்டு வருவது தெரிய வந்தது. இதனால் மீண்டும் Mohammad Farman கைது செய்யப்பட்டார்.
அவருடையசகோதரர் Mohammad Farman, போலீஸாரிடம் சிக்காமல் தப்பித்துவிட்டார். அவரை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.