உத்திரபிரதேசத்தில் மூன்று வயது குழந்தையின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்ததுடன், பிறந்து 14 நாட்களேயான குழந்தையையும் கொன்றுள்ள கோர சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் ராம்பூரை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
இவருடன் பிறந்து 14 நாட்களேயான பச்சிளம் குழந்தையும், மூன்று வயது மகளும் இருந்தனர்.
பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கிவிடவே, பஸ் டிரைவரும், கண்டக்டரும் குறித்த பெண்ணை அவரது இருப்பிடத்திற்கே சென்று விடுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட தொடங்கியுள்ளனர், ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு வலுக்கட்டாயமாக மதுவை கொடுத்துள்ளனர்.
அழுது கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை தூக்கி வீசியதில், குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மூன்று வயது குழந்தை செய்வது அறியாமல் கடைசியில் சென்று ஒளிந்து கொண்டார்.
கடைசியில் குறித்த பெண்ணை பலாத்காரம் செய்ததுடன், தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
காலையில் இதனை பார்த்த மக்கள் குறித்த பெண்ணின் கணவருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் டிரைவர், கண்டக்டர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.