வடக்கிலே இராணுவ முகாம்களை அமைக்கும் நோக்குடன் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் முகமாக ..மாதகல், கோணாவளை பகுதியில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன் காணியை அளவீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்படவிருந்த போது, அதனை பொதுமக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்திய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள்.
நில ஆக்கிரமிப்பு, இராணுவ அத்துமீறல்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி கூட்டமைப்பினர்கள் றோட்டில் இறங்கி துணிந்து போராடுவார்களாக இருந்தால் கட்டாயம் புரட்சி வெடிக்கும்.
மக்களை பெரும்தொகைாயக திரட்டி இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்போராட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும்.
துணிந்து காவல் துறையினருடன் போராடும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சத்திரனுக்கு இந்த நேரத்தில் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாட்டில என்னதான் நடந்தாலும் நமகென்ன? என்கின்ற தோறனையில்… மாலைகளோடும், மரியாதை வரவேற்புக்களோடும் நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிக்கொண்டு, மைக்கை பிடித்து அரசுக்கெதிராக எதாவது குற்றம், குறை சொல்லிக்கொண்டு ஒரு பகுதியினர் காலத்தையோட்டி கொண்டு, பதவி சுகங்களை அனுபவித்துக்கொண்டு திரிகிறார்கள்.
இவர்கள் தமிழர்களுக்கு அப்படி என்ன செய்து கிழித்துவிட்டார்கள் என்று இவ்வளவு மரியாதை கொடுத்து அழைத்துக்கொண்டு திரிகிறார்கள்.